Monday, November 23, 2009

Free Shutdown Timer 1.0


Free Shutdown timer is the software which can automate Shutdown,restart,log off,lock,Hibernate and Standby operations.This can be very helpful if some activity is being performed on your system and you want to shut down pc after a time period.This helps in saving electricity bills.If you are habituated of listening to songs while sleeping,this software can help you.Start a song and set the interval after which shutdown should be automated.The system will automatically shutdown after that intervalFollowing are the features of Video and Audio Coverter :

a) Auto Shutdown : It can shutdown system at a particular time or after a time interval.
b) Auto Reboot : It can restart system at a particular time or after a time interval.
c) Auto Hibernate : It can Hibernate system at a particular time or after a time interval.
d) Auto Log off : It can Log Off system at a particular time or after a time interval.
e) Auto Standby : It can put system to stand by at a particular time or after a time interval.
f) Auto Lock : It can automatically lock system at a particular time or after a time interval.



File Size: 2.03MB


Click here to download

Tuesday, November 17, 2009

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை ஒரே மின்னஞ்சற் பெட்டியில் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது எப்படி?


ஒரு நபரிடம் உங்கள் விலாசம் தாருங்களேன் என்று 20 வருடங்களின் முன்னே கேட்டால், சற்றும் யோசிக்காமல் அவர் தன் வீட்டு விலாசத்தைக் காகிதத்திலோ விண்ணப்பப் பத்திரத்திலோ எழுதிக் கொடுப்பார். ஆனால் இப்போழுது அதே கேள்விக்குப் பதிலாய் வருவது இந்த எதிர்க் கேள்வி தான் " வீட்டு விலாசமா? மின்னஞ்சல் முகவரியா? " என்று கேட்பார்.
இதில் இவர் தவறேதும் இல்லை. காலம் மாறிவிட்டது, நம் அன்றாட வாழ்வில் கணணி மற்றும் இணையத்தின் ஆக்கிரமிப்பைத் தான் இந்த எதிர்க் கேள்வி பிரதிபலிக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையினர் மட்டும் இல்லை, கணணியைப் பயன்படுத்தும் எல்லோரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றன. அப்படி இருப்பது ஒரு விதத்தில் நல்லதும்கூட. உங்கள் உத்தியோக மற்றும் தனிப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் இரண்டையும் தனியே நிர்வகிப்பதுதான் சரி. இன்னும் சிலர் ஐந்தாறு மின் அஞ்சல் முகவரிகள் வைத்திருப்பார்கள். குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள ஒன்று, மிகமிகப் பரிசயம் உள்ள நண்பர்களுக்கென்று ஒன்று, சும்மா ஒரு சம்பரதாயத்துக்கு முகவரி கேட்பவர்களுக்கு ஒன்று இப்படி பல காரணங்கள் இருக்கும். ஆனால் எப்பவுமே எல்லா அஞ்சல் பெட்டிகளையும் பார்த்து பதில்கடிதம் போடுவது சிரமம் மட்டும் இல்லை, ஒரு விதமான நச்சரிப்பை ஏற்படுத்தும். இந்தக் காரணத்தால் சில மின் அஞ்சல் பெட்டிகளைப் பலவாரங்கள் திறக்காமலேயே கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. அம்மாதிரி நேரத்தில் முக்கியமான கடிதம் வந்தால் நமக்குத் தெரியாமலேயே போய்விடும்.
அதனாலே, எவ்வளவு மின் அஞ்சற் பெட்டிகள் வைத்திருந்தாலும், எல்லா அஞ்சல்களையும் ஒரே பெட்டியில் பார்ப்பது / படிப்பது மற்றும் பதில்கடிதம் போடுவது நம் நேரத்தையும் வேலையையும் நிர்வகிக்க உதவியாக இருக்கும். 'என்னடா, ஒரு காரணமாத் தானே பல முகவரிகள் வச்சிருக்கோம், எல்லாம் ஒரே பெட்டியிலிருந்து பதில் போட்டால், எல்லாருக்கும் என் " வெளியிட விரும்பாத " முகவரி தெரிந்துவிடுமே என்று கவலைப்பட வேண்டாம். இந்த முறையின் சிறப்பே உங்களுக்கு எந்த முகவரியைத் தெரியப்படுத்த விருப்பம் இருக்கோ, அதிலிருந்து பதில் போட்டது போலவே Settings அமைக்கலாம்.
Ex: உங்களிடம் 4 மின் அஞ்சல் முகவரிகள் உள்ளன. mydu22@gmail.com, mydu22@hotmail.com mydu22@abc.com , mydu22@rediffmail.com .
செய்முறை விளக்கத்துக்காக நீங்கள் mydu22@gmail.com என்ற முகவரியைத் தான் மிக அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல்கட்ட நடவடிக்கையாக, எல்லா அஞ்சல்களையும் உங்கள் mydu22@gmail.com என்ற முகவரிக்குத் தானாகவே Forward செய்யும்படி  அமைக்க வேண்டும்.
  1. சம்பந்தப்பட்ட ( மற்ற ) மின் அஞ்சற் பெட்டியில் இருக்கும் Settings / Mail Oprions / Options / Filters ல் போய் Forward Mails  என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் Forward all incomming mails  ஐத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் முகவரியை இங்குக் குடுக்கவும்.[ இந்த உதாரணத்தில் mydu22@gmail.com ] இப்படிக் கொடுப்பதால், எல்லா அஞ்சல்களும் ஒரே முகவரியில் வந்து சேரும்.
  2. ஆடுத்ததாக, உங்கள் gmail பெட்டியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். யார் எந்த முகவரிக்குக் கடிதம் போட்டார்களோ, அவங்களுக்கு உங்கள் பதிற்கடிதம் அந்த முகவரியிருந்தே போட்டமாதிரி இருக்கும்.
  3. உங்களது Gmail ல் வலதுபக்கம் இருக்கும் Settings ஐத் தேர்வு செய்யவும்
  4. இதில் Accounts என்பதைத் தேர்வு செய்யவும்.
  5. அடுத்து Add another email address you own ல் சொடுக்கவும்
  6. அடுத்து வரும் பெட்டியில் உங்களுடைய இன்னொரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். (உதா: mydu22@hotmail.com )
  7. நீங்கள் கொடுக்கும் முகவரி உங்களுடையது தானா என்று சரிபார்க்க Verification Mail  அந்த முகவரிக்கு அனுப்பப்படும்.
  8. அடுத்து mydu22@hotmail.com இல் சென்று, அங்கு வந்திருக்கும் அஞ்சலில் இருக்கும் confirmation Code ஐ Copy செய்து, Step 5 இல் சொல்லப்பட்டிருக்கும் பெட்டியில் கொடுத்து Verify செய்யவும்.
  9. மறுபடியும் Gmail – Settings – Accounts ஐப் பார்த்தால்  உங்களது mydu22@hotmail.com என்ற முகவரி சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
  10. பதில் போடும் முகவரி எதுவாக இருக்கவேண்டும் என்பதைத் தேர்வு செய்ய, When receiving a message: - Reply from the same address email was sent to என்பதைத் தேர்வு செய்தால் மட்டுமே போதும்.

 உங்களது மற்ற முகவரிகளையும் இம்மாதிரி settings செய்தால் அடிக்கடி எல்லாப் பெட்டிகளையும் திறக்கும் அவசியம் இருக்காது. இது மட்டும் இல்லை, Gmail – Compose box – FROM என்ற இடத்தில் நீங்கள் இணைத்துள்ள அனைத்து முகவரிகளின் பட்டியல் இருக்கும். தேவையானதைத் தேர்வு செய்து கடிதம் அனுப்பலாம்.
இப்போ திருப்பதியா................?

Wednesday, October 28, 2009

ஒரே கிளிக்கில் 90 இலவச மென்பொருட்கள்

Antivirus to Web browsers...


நீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா?.....
இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள் (softwares) நிறுவணுமா.?
அதுக்கு நீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை .கீழ இருக்கற தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து மென்பொருட்களும் (a to z) ஒரே கிளிக்கில் கிடைக்கும்.
ரொம்ப லேசா போச்சிபா......

தள முகவரி


ஒலி நூலகம் தெரியுமா?


நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?

அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.
சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.
நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன‍. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. எல்லமே ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்,மற்றும் தொழில் முறை இசையமைப்பாளர்கள் வுருவாக்கியவை.
விலங்குகளின் ஒலிகள், தொழிற்சாலை ஓசைகள், இசை மெட்டுக்கள், வீட்டில் கேட்கும் ஒலிகள், இயற்கை ராகங்கள் என எண்ணற்ற ஒலிகள் கொட்டிகிடக்கின்றன.
இதில் எவற்றை வேண்டுமாலும் பதிவிறக்கம் செய்து கேட்டு பார்க்கலாம் . பயன்படுத்தலாம்.காப்புரிமை தொல்லை கிடையாது.எனினும் நிபந்தனைகளை கவனமாக படித்துக்கொள்ளவும்
ஆனால் அதற்கு முன்னால் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பிறகு ஒலிகளை தேட துவங்கிவிடலாம்.
ஒலிகளை கேட்பது மட்டும் அல்ல உங்கள் வசம் உள்ள ஒலிகலையும் இங்கே சமர்பிக்கலாம்.
ஆரம்பத்தில் எத்தனை முறை வேன்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்து வந்தனர். ஆனால் இப்போது முதல் 5 ஒலிகள் மட்டுமே இலவசமாக உள்ளது. அதன் பிறகு கட்டணம் உண்டு.
அதிகமானோர் பதிவிறக்கம் செய்வதால் தளத்தை பராமரிக்க அதிக செலவு ஆவதாலும், ஒலிகளை வழங்குபவர்கள் அதற்கான பலனை கேட்பதாலும் பகுதி இலவசம் பகுதி கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.
ஆனால் ஒன்று நீங்கள் ஒலிகளை சமர்பிப்பவராக இருந்தால் இதன் மூலம் வருமானம் வரவுன் வாய்ப்புள்ளது அல்லவா?

ஒலிகளை கேட்டு ம‌கிழ….
Link

Thursday, October 22, 2009

என் ஏகாந்தத்தில் சில நொடிகள்....!

!!** தைரியம் **!!
ஆழமான பொய்கையிலே
அணு அளவும் பயமின்றி 
துள்ளி ஆடி 
பந்தாடினர்,
பத்து வயது பாலகர்
பலர்.
பொய்கையிலே
நீர் இல்லை
என்பதால்...
***********************************************************************
!!** சிதறல் **!!

உன் 
விழி வீச்சில் 
அடிபட்டு 
சிதறியது 
என் இதயம். 
சிதறிய துண்டுகளில் 
உன் 
அழகிய வதனம்...!
***********************************************************************
!!** (வெங்)காயம் **!!

காயபட்டவனுக் அல்லாமல்
காயப்படுதியவனுக்கு
கண்ணீர் வந்தது....
வெங்காயமும், சமையல் காரனும்.




***********************************************************************
!!** காத்திருப்பு **!!




கருவறையில் சூள் கொள்ளும் 
காத்திருப்புகள்....
கல்லறையிலும் பிரசவிக்காமல்
பிரசவ வழியை மட்டுமே 
காட்டி நிற்கும். 


***********************************************************************


    !!** என் Phone காதல் **!!

உன்னைக் காணும் பொழுதெல்லாம் on ஆகும் 
Cell Phone போல என் உள்ளத்திலும் 
ஒரு Light பற்றியது.
உன்னைக் காணும் ஒவ்வொரு தடவையும் 
என் Cell Phone Camera படம் எடுத்தது
சுகமாக,
உன் நினைவு நிமிடத்துக்கு 60 தடவை அடித்தது
Miss call.
உன் கண்களின் ஓரப்பார்வை அடிக்கடி என் ஆசைகளை 
Re-Load பண்ணியது.
உன்னுடன் பேச கிடைத்ததுமே உடனே Active ஆனது 
காதல்......
காதலை சொன்னதும் Bill காட்டாத line போல ஏன் என்னை 
Cut பண்ணினாய்?
இருந்தும் என் Dial செய்யும் பனி தொடர்ந்தது......
உன் Phone இல் இருந்து Plz.. try again later என்பது மட்டுமே 
பதிலானது.
இப்பொழுதெல்லாம் Sim Card இல்லாத Cell Phone போல 
ஜடமாகவே கிடக்கிறேன் நான்....,
நீயோ...,
வேறு ஒரு Phone இல் Insert ஆகி சுகமாக அனுப்புகிறாய் 
SMS!
பார்வையால் எத்தனையோ Call எடுத்தேன்
நான்.
எல்லா நேரமும் User Busy யாகவே உள்ளதேன்?




Tuesday, October 20, 2009

தியானம் செய்தால்..........!

பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....


விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் ஒரு குகை..


தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.






குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குழம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை.. அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” என்றார்..



---------------------------------------------------------------------------


தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை; மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல் பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள் உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்? மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.