Thursday, October 22, 2009

என் ஏகாந்தத்தில் சில நொடிகள்....!

!!** தைரியம் **!!
ஆழமான பொய்கையிலே
அணு அளவும் பயமின்றி 
துள்ளி ஆடி 
பந்தாடினர்,
பத்து வயது பாலகர்
பலர்.
பொய்கையிலே
நீர் இல்லை
என்பதால்...
***********************************************************************
!!** சிதறல் **!!

உன் 
விழி வீச்சில் 
அடிபட்டு 
சிதறியது 
என் இதயம். 
சிதறிய துண்டுகளில் 
உன் 
அழகிய வதனம்...!
***********************************************************************
!!** (வெங்)காயம் **!!

காயபட்டவனுக் அல்லாமல்
காயப்படுதியவனுக்கு
கண்ணீர் வந்தது....
வெங்காயமும், சமையல் காரனும்.




***********************************************************************
!!** காத்திருப்பு **!!




கருவறையில் சூள் கொள்ளும் 
காத்திருப்புகள்....
கல்லறையிலும் பிரசவிக்காமல்
பிரசவ வழியை மட்டுமே 
காட்டி நிற்கும். 


***********************************************************************


    !!** என் Phone காதல் **!!

உன்னைக் காணும் பொழுதெல்லாம் on ஆகும் 
Cell Phone போல என் உள்ளத்திலும் 
ஒரு Light பற்றியது.
உன்னைக் காணும் ஒவ்வொரு தடவையும் 
என் Cell Phone Camera படம் எடுத்தது
சுகமாக,
உன் நினைவு நிமிடத்துக்கு 60 தடவை அடித்தது
Miss call.
உன் கண்களின் ஓரப்பார்வை அடிக்கடி என் ஆசைகளை 
Re-Load பண்ணியது.
உன்னுடன் பேச கிடைத்ததுமே உடனே Active ஆனது 
காதல்......
காதலை சொன்னதும் Bill காட்டாத line போல ஏன் என்னை 
Cut பண்ணினாய்?
இருந்தும் என் Dial செய்யும் பனி தொடர்ந்தது......
உன் Phone இல் இருந்து Plz.. try again later என்பது மட்டுமே 
பதிலானது.
இப்பொழுதெல்லாம் Sim Card இல்லாத Cell Phone போல 
ஜடமாகவே கிடக்கிறேன் நான்....,
நீயோ...,
வேறு ஒரு Phone இல் Insert ஆகி சுகமாக அனுப்புகிறாய் 
SMS!
பார்வையால் எத்தனையோ Call எடுத்தேன்
நான்.
எல்லா நேரமும் User Busy யாகவே உள்ளதேன்?




1 comment:

  1. User Busy இல்லாதப் ரைப் பண்ணி பாருங்களேன்...
    என்ன ஓகேவா...நல்லா இருக்கு உங்களோட வலைப்பதிவு

    ReplyDelete